பதிவு செய்த நாள்
17 மார்2022
21:42
புதுடில்லி:மார்ச் 14ம் தேதி நிலவரப்படி, நடப்பு நிதியாண்டின் ஏற்றுமதி, 29.64 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது:கடந்த 14ம் தேதி நிலவரப்படி, நாட்டின் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில், 390 பில்லியன் டாலராக, அதாவது, 29.64 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. விரைவில், இது 400 பில்லியன் டாலர் என்ற நிலையை தாண்டும் என எதிர்பார்க்கலாம்.
மேலும், வாகன பாகங்கள் துறை, முதன் முறையாக, 4,560 கோடி ரூபாய் வர்த்தக உபரியை பெற்றுள்ளது.வாகன தயாரிப்பாளர்கள், இறக்குமதிக்கு பதிலாக, உள்நாட்டு தயாரிப்புகளை வாங்க முன்வர வேண்டும்.மேலும், வாகன தயாரிப்பு துறையில் உள்ளவர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக, அதிகளவிலான முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, மின்சார வாகனங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் முதலீடுகளில், அதிக முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|