பதிவு செய்த நாள்
18 மார்2022
20:20
புதுடில்லி:குழாய் பதிப்பு பணியில் ஈடுபட்டு வரும் ‘கோர்டெக் இன்டர்நேஷனல்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.
போர் காரணமாக, சந்தையில் கடுமையான ஏற்ற _ இறக்கங்கள் இருந்து வரும் நிலையிலும், இந்திய பங்குச் சந்தையில், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதில், நிறுவனங்களின் ஆர்வம் குறையவில்லை.அந்த வகையில், தற்போது, கோர்டெக் இன்டர்நேஷனல், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது.
இந்த பங்கு வெளியீட்டின்போது, இந்நிறுவனம் 350 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும்; நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 40 லட்சம் பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.மேலும், பங்குகளை மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை ஆகியவற்றில் பட்டியலிட உள்ளது.
பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியைக் கொண்டு, கடன்களை அடைக்கவும், புதிய சாதனங்கள் வாங்குவதற்கும், நடைமுறை மூலதன தேவைகளுக்கும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.இந்நிறுவனம், ஹைட்ரோகார்பன் குழாய் பதிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|