பறக்கிறது பறக்கிறது ...  சமூக ஊடகத்தை பயன்படுத்த ‘சிப்காட்’ புதிய முயற்சி சமூக ஊடகத்தை பயன்படுத்த ‘சிப்காட்’ புதிய முயற்சி ...
தண்ணீருக்கு புத்துணர்வு வழங்கும் ஜிவா கருவி அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2022
19:48

தூய்மையான தண்ணீருக்கு உத்தரவாதமிக்க தீர்வுகளை வழங்கும் பெங்களூரைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான போர்த் பேஸ் வாட்டர் டெக்னாலஜிஸ் நிறுவனம் புதிதாக ஜிவா எனும் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி தண்ணீரின் தரத்தை உயர்த்தி அதை ஆற்றல்மிக்க தண்ணீராக மாற்றுவதோடு, மண்ணை வளமாக்கி அமோக விளைச்சலுக்கும் உறுதுணையாக இருக்கும்.

ஜிவா கருவி வீடுகளில் பயன்படுத்தும் வகையிலும், விவசாய நிலங்களில் பயன்படுத்தும் வகையிலும் 4 மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை அவரவர்களின் பயன்பாட்டைப் பொறுத்து 8,500 ரூபாய் முதல் 1,15,000 ரூபாய் வரை இருக்கும். இதை வீடுகள், வயல்கள், கால்நடை, கோழிப் பண்ணைகளில் உள்ள தண்ணீர் குழாய்களில் பொருத்தலாம்.

இது குறித்து நிறுவனத்தின் நிறுவனரும், நீர் மேலாண்மை விஞ்ஞானியுமான டாக்டர் கிருஷ்ணா மாதப்பா கூறுகையில், தூய்மையான மற்றும் ஆற்றல்மிக்க தண்ணீருக்காக ஜிவா என்னும் புதிய கருவியை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இது உள்நாட்டில் தயாரிக்கப்படும் பம்ப் மற்றும் பைப்புகளில் எளிதாக பொருத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவி வழியாக செல்லும் சாதாரண தண்ணீர் மூன்று படி நிலைகளில் தண்ணீரை ஆற்றல்மிக்கதாக மாற்றும் செயல்முறையை மேற்கொள்கிறது. அது தண்ணீரில் இருக்கும் எந்த அழுத்தத்தையும் குறைத்து ஆற்றல் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் தண்ணீரை அதன் இயற்கையான மற்றும் ஊட்டச்சத்து நிலைக்கு மாற்றுகிறது. தமிழகத்தில் கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 25க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் பண்ணைகளில் ஜிவா கருவியை பொருத்தப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது, என்று தெரிவித்தார்.

நிறுவனத்தின் இயக்குனர் வி. சீனிவாசன் கூறுகையில், "ஜிவா கருவி பல பயிர்களின் மகசூல், தரம் மற்றும் அதற்கான காலம் ஆகியவற்றில் நல்ல மாற்றம் ஏற்படுகிறது. இந்த கருவியை பயன்படுத்தி தண்ணீர் பாய்ச்சும்போது அது மண்ணை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இதன் காரணமாக தண்ணீர் பயன்பாடு வெகுவாக குறைகிறது. மண்ணின் தரம் உயர்வதால் இங்கு பயிரிடப்படும் பயிர்கள் அதன் வேர்கள் மூலம் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதால் பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களின் பயன்பாடு வெகுவாக குறைகிறது. பயிர்களை பாதிக்கும் தாவர நோய்கள் அதிக அளவில் வராமல் குறைக்கிறது. பைப் லைன்களில் உருவாகும் கால்சிபிகேஷன் பாதிப்பு இல்லாமல் குறைக்கிறது" எனத் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)