பதிவு செய்த நாள்
22 மார்2022
21:01
புதுடில்லி:அண்மையில் மூடிஸ் நிறுவனம், வளர்ச்சி குறித்த தன்னுடைய கணிப்பை குறைத்து அறிவித்திருந்த நிலையில், தற்போது, பிட்ச் நிறுவனமும் குறைத்து அறிவித்துள்ளது.
தர நிர்ணய நிறுவனமான ‘பிட்ச்’, நாட்டின் அடுத்த நிதிஆண்டுக்கான வளர்ச்சி குறித்த தன்னுடைய கணிப்பை, குறைத்து, 8.5 சதவீதமாக அறிவித்துள்ளது.இந்நிறுவனம், இதற்கு முன்பாக வளர்ச்சி 10.3 சதவீதமாக இருக்கும் என கணித்து அறிவித்திருந்த நிலையில், தற்போது அதை குறைத்துள்ளது.
அதேசமயம், நடப்பு நிதியாண்டுக்கான வளர்ச்சி குறித்த கணிப்பை, முந்தைய கணிப்பிலிருந்து 0.6 சதவீதம் உயர்த்தி, 8.7 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக, உலகளவிலான கச்சா எண்ணெய் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயர்வால், தொழிற்சாலைகளின் செலவு அதிகரிக்கும். இது விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்று பிட்ச் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|