பதிவு செய்த நாள்
22 மார்2022
21:08
மும்பை:பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, மும்பையில் புதிய வீட்டுக்கு குடிபோக உள்ளார்.
முகேஷ் அம்பானி, மும்பையில் தன்னுடைய பிரமாண்டமான ‘அன்டிலியா’ எனும் வீட்டுக்கு குடிபெயர்ந்தது, அப்போது பெரிதாக பேசப்பட்டது. அதன் பின் இப்போது, ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வாங்கி இருக்கும் புதிய வீட்டை பற்றிய பேச்சு எழுந்துள்ளது.இந்த புதிய வீடு, 70 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ளது. 4வது மாடியில், பெரிய விருந்து மண்டபம் அமைந்துள்ளது. 8வது மாடியில் உடற்பயிற்சி கூடங்கள் போன்றவை அமைந்து உள்ளன.அடுத்து, 10வது மாடியில் விருந்தினர்களுக்கான படுக்கை அறைகள். 11வது மாடி குழந்தைகளுக்காக.
12வது மாடி ஜுன்ஜுன்வாலா தம்பதிக்கானது.இதில் குறிப்பிடத்தக்க விஷயம், பங்குச் சந்தைகளில் திட்டமிட்டு முதலீடு செய்வது போலவே, நீண்டகாலம் காத்திருந்து, இந்த வீட்டை அவர் கைப்பற்றி இருக்கிறார்.கடந்த 2013ம் ஆண்டில், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 6 வீடுகளை, ‘ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு’ வங்கி விற்றுவிட முடிவு செய்தது. மீதி 6 வீடுகள், எச்.டி.எப்.சி., வசம் இருந்தன.
இதை கேள்விப்பட்டு, முதலில் ஆறு வீடுகளை, 176 கோடி ரூபாய்க்கு வாங்கினார். அதன் பின், 4 ஆண்டுகள் பொறுமையாக இருந்து, 2017ல், மீதி 6 வீடுகளை 195 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளார்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|