பதிவு செய்த நாள்
28 மார்2022
22:22
புதுடில்லி : தங்க நகைகள் விற்பனை நிறுவனமான, ‘ஜோயாலுக்காஸ் இந்தியா’, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.
இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 2,300 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.இந்த பங்கு வெளியீட்டின் போது, முற்றிலும் புதிய பங்குகளே விற்பனை செய்யப்பட உள்ளன. நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் பங்குகள் எதையும் விற்பனை செய்யவில்லை என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியில், 1,400 கோடி ரூபாயை கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக பயன்படுத்த உள்ளது.மேலும், 470 கோடி ரூபாயை புதிதாக 8 ஷோரூம்களை துவக்குவதற்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. அத்துடன் திரட்டப்படும் நிதியை, பொதுவான நிர்வாக செலவுகளுக்கும் பயன்படுத்த உள்ளது.
கேரளாவை அடிப்படையாக கொண்ட இந்நிறுவனம், தங்க நகை மட்டுமின்றி; வெள்ளி, பிளாட்டினம், வைரம் ஆகியவற்றின் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளது.கடந்த நிதியாண்டில், இந்நிறுவனம் 472 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|