பதிவு செய்த நாள்
29 மார்2022
07:09
புதுடில்லி: வரும்காலத்தில், புதுமையான தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்த, ‘கூகுள் கிளவுட்’ நிறுவனத்துடன் கூட்டு வைத்துள்ளதாக, ‘அதானி குழுமம்’ தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் அதானி குழுமத்தின் தகவல் தொழில்நுட்ப செயல்பாடுகளை நவீனமாக்கும் வகையில், கூகுள் கிளவுட் உடன், நீண்ட கால அளவில் கூட்டு வைத்துள்ளதாக, அதானி குழுமம் தெரிவித்துள்ளது.இதன் வாயிலாக, அதானி குழுமத்தின் ஒவ்வொரு நிறுவனத்தையும் நவீனமயமாக்குவதற்கான உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப வசதிகள், தொழில்துறை தீர்வுகள் ஆகியவை ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, அதானி குழுமத்தின் 250க்கும் மேற்பட்ட சர்வர்கள் உள்ளிட்ட அமைப்புகள், கூகுள் கிளவுட் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்படுகிறது.இது குறித்து, நிறுவனத்தின் தலைவர் கவுதம் அதானி கூறியதாவது:நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் வகையிலான நிறுவனமாக உருவாக்கும் வகையில், கூகுள் கிளவுட் உடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது எங்களுக்கு மேலும் பல புதிய வணிக பகுதிகளை அடையாளம் காண உதவும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|