பதிவு செய்த நாள்
29 மார்2022
20:07
புதுடில்லி:மின்னணு வர்த்தக நிறுவனமான, ‘ஷாப்பி’, இந்தியாவில் தன்னுடைய வணிகத்தை மூடுவதாக அறிவித்துள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த, ‘ஸீ ’எனும் நிறுவனத்துக்கு சொந்தமானது, ஷாப்பி.
புதிய வேலை
இந்தியாவில், ஷாப்பி அண்மையில் தான் துவங்கப்பட்டது. துவங்கிய ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே அதை மூடிவிடுவதாக, ஸீ நிறுவனம் தற்போது அறிவித்து உள்ளது.உலக சந்தைகளில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலையால், இந்த முடிவை எடுத்திருப்பதாக, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், பிரான்ஸில் உள்ள ஷாப்பி வணிகத்தையும் நிறுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம், அதில் பணியாற்றும் 300 ஊழியர்களுக்கு, புதிய வேலை கிடைக்க உதவும் என்றும்; அப்படி கிடைக்காதபட்சத்தில், அவர்களுக்கு பணிநீக்க இழப்பீடை வழங்கும் என்றும் கூறப்பட்டுஉள்ளதாக தெரிகிறது.
25 சதவீதம்
அண்மையில், இந்தியா 54 சீன செயலிகளை தடை செய்வதாக அறிவித்தது. அவற்றில், ஸீ நிறுவனத்துக்கு சொந்தமான, ‘கரேனா பிரீ பயர்’ செயலியும் ஒன்று.மேலும், ஸீ நிறுவனம், சீனாவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ‘டென்சென்ட்’ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு, விதிமுறைகளை மீறி, ஷாப்பி நிறுவனத்தில், டென்சென்ட் 25 சதவீதம் முதலீடு செய்திருப்பதாகவும்; அதனால் அதை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்தது.இந்நிலையில், தற்போது இந்தியாவில் இருந்து, ஷாப்பி மற்றும் கரேனா ப்ரீ பயர் ஆகிய வணிகங்கள் வெளியேறி உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|