ஆபரணங்கள் ஏற்றுமதிக்கு அரசின்  உதவிகள்:பியுஷ் கோயல் ஆபரணங்கள் ஏற்றுமதிக்கு அரசின் உதவிகள்:பியுஷ் கோயல் ... ரூ.10க்கு அறிமுகமாகும் ஐடிசியின் சாவ்லான் ஹாண்ட்வாஷ் ரூ.10க்கு அறிமுகமாகும் ஐடிசியின் சாவ்லான் ஹாண்ட்வாஷ் ...
சீன பின்னணியில் இயங்கிவந்த ‘ஷாப்பி’ இந்தியாவில் மூடப்பட்டது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2022
20:07

புதுடில்லி:மின்னணு வர்த்தக நிறுவனமான, ‘ஷாப்பி’, இந்தியாவில் தன்னுடைய வணிகத்தை மூடுவதாக அறிவித்துள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த, ‘ஸீ ’எனும் நிறுவனத்துக்கு சொந்தமானது, ஷாப்பி.

புதிய வேலை

இந்தியாவில், ஷாப்பி அண்மையில் தான் துவங்கப்பட்டது. துவங்கிய ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே அதை மூடிவிடுவதாக, ஸீ நிறுவனம் தற்போது அறிவித்து உள்ளது.உலக சந்தைகளில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலையால், இந்த முடிவை எடுத்திருப்பதாக, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், பிரான்ஸில் உள்ள ஷாப்பி வணிகத்தையும் நிறுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளது.

இந்நிறுவனம், அதில் பணியாற்றும் 300 ஊழியர்களுக்கு, புதிய வேலை கிடைக்க உதவும் என்றும்; அப்படி கிடைக்காதபட்சத்தில், அவர்களுக்கு பணிநீக்க இழப்பீடை வழங்கும் என்றும் கூறப்பட்டுஉள்ளதாக தெரிகிறது.

25 சதவீதம்

அண்மையில், இந்தியா 54 சீன செயலிகளை தடை செய்வதாக அறிவித்தது. அவற்றில், ஸீ நிறுவனத்துக்கு சொந்தமான, ‘கரேனா பிரீ பயர்’ செயலியும் ஒன்று.மேலும், ஸீ நிறுவனம், சீனாவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ‘டென்சென்ட்’ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு, விதிமுறைகளை மீறி, ஷாப்பி நிறுவனத்தில், டென்சென்ட் 25 சதவீதம் முதலீடு செய்திருப்பதாகவும்; அதனால் அதை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்தது.இந்நிலையில், தற்போது இந்தியாவில் இருந்து, ஷாப்பி மற்றும் கரேனா ப்ரீ பயர் ஆகிய வணிகங்கள் வெளியேறி உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)