பதிவு செய்த நாள்
09 ஏப்2022
21:15
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, கடந்த வாரத்தில், 37.57 சதவீதம் அதிகரித்துள்ளதாக, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 1 -– 7ம் தேதி வரையிலான காலத்தில், ஏற்றுமதி 37.57 சதவீதம் அதிகரித்து, 70 ஆயிரத்து, 832 கோடி ரூபாயை எட்டி உள்ளது.பெட்ரோலியம் பொருட்களை தவிர்த்து பார்த்தால், நாட்டின் ஏற்றுமதி, மதிப்பீட்டு வாரத்தில் 24.32 சதவீதம் உயர்ந்து உள்ளது.ஏற்றுமதியை போலவே, இறக்குமதியும் அதிகரித்து உள்ளது. மதிப்பீட்டு வாரத்தில், இறக்குமதி 8.29 சதவீதம் உயர்ந்து, 80 ஆயிரத்து, 104 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி இதுவரை இல்லாத வகையில் அதிகரித்து, புதிய சாதனையை படைத்தது. கடந்த நிதியாண்டில், மொத்தம் 31.77 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி நடைபெற்று உள்ளது. பெட்ரோலியம் பொருட்கள், பொறியியல் பொருட்கள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், ரசாயனம் ஆகியவை அதிக அளவில் ஏற்றுமதி ஆனதே, இந்த உயர்வுக்கு காரணமாக அமைந்தது. நடப்பு நிதியாண்டிலும், ஏற்றுமதியில் நாடு புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|