10 மடங்கு அதிகரிப்பு 10 மடங்கு அதிகரிப்பு ...  ஓய்வு பலனாக பெற்ற பணத்துக்கு வருமான வரி கட்ட வேண்டுமா? ஓய்வு பலனாக பெற்ற பணத்துக்கு வருமான வரி கட்ட வேண்டுமா? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்: கிடப்பில் போட்ட ரிசர்வ் வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2022
23:44

மும்பை:நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டை அறிமுகம் செய்யும் திட்டத்தை, ரிசர்வ் வங்கி, கிடப்பில் போட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த 2015 – 16 ஆண்டறிக்கையில், ரிசர்வ் வங்கி, சோதனை முயற்சியாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட உள்ளதாக தெரிவித்திருந்தது.ஆனால், ஆண்டுகள் பல கடந்தாலும், அதற்கான முயற்சிகளை மத்திய வங்கி தீவிரமாக எடுக்கவில்லை. கிட்டத்தட்ட கிடப்பில் போட்டுவிட்டது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
முதல் காரணம், இந்தியாவின் பருவநிலை. இந்தியாவின் அதிக வெப்பம் கொண்ட சூழலுக்கு, இந்த பாலிமர் பிளாஸ்டிக் தாள்கள் ஏற்புடையதாக இல்லை என ரிசர்வ் வங்கி கருதுகிறது.இரண்டாவது முக்கிய காரணம், நாட்டில் அதிகரித்து வரும் டிஜிட்டல் பணப் பரிமாற்றம்.யு.பி.ஐ., வாயிலாக, பட்டன் போன் வரை, டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மக்களும், சிறு சிறு தொகைகளை கூட, டிஜிட்டல் வாயிலாக செலுத்த பழகி வருகின்றனர்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில், இப்போது பிளாஸ்டிக் நோட்டுகள் தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது.ரிசர்வ் வங்கியின் 2015_16 ஆண்டறிக்கையில், 10 ரூபாய் மதிப்பிலான 100 கோடி நோட்டுகள் அச்சிடப்பட்டு, நாட்டின் பலதரப்பட்ட பருவநிலை கொண்ட பகுதிகளில் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், அதிக வெப்பம் காரணமாக, இந்த நோட்டுகள் எளிதாக தீப்பிடிக்க கூடியவையாக இருந்தன.மேலும், வங்கி தரப்பிலும் இந்த பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அதிக வெப்பம் காரணமாக சேதமானால், மாற்றிகொடுப்பது என்பது சிக்கலான ஒரு நடைமுறையாக மாறிவிடும் என தெரிவிக்கப்பட்டது.
அதேசமயம், தற்போதுள்ள ரூபாய் காகித நோட்டுகள் கறை படிந்தாலோ, சேதமடைந்தாலோ எளிதாக வங்கிகளில் மாற்றிக் கொள்ள இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டது.ரிசர்வ் வங்கி தரவுகளின் படி, ஆண்டுக்கு 100.50 சதவீதம் அளவுக்கு, யு.பி.ஐ., அடிப்படையிலான பணப்பரிவர்த்தனைகள் எணிக்கையும், தொகையும் அதிகரித்து வருகின்றன.
எனவே, பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் கொண்டு வரும் திட்டத்தை, ரிசர்வ் வங்கி கிட்டத்தட்ட கிடப்பில் போட்டுவிட்டதாகவே கருதலாம்.இவ்வாறு அவர் கூறினார்.டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில், இப்போது, பிளாஸ்டிக் நோட்டுகள் தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)