பதிவு செய்த நாள்
19 ஏப்2022
21:31
புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, நடப்பு ஏப்ரல் மாதத்தில், 14ம் தேதி வரையிலான காலத்தில், 37 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
இம்மாதத்தில், கடந்த 1 – 14ம் தேதி வரையிலான காலத்தில், நாட்டின் ஏற்றுமதி 37.01 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு 1.43 லட்சம் கோடி ரூபாய்.கடந்த 2021ம் ஆண்டில், இதே காலத்தில், ஏற்றுமதி 1.04 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கே இருந்தது.
இவ்வாண்டு ஏப்ரலில் இறக்குமதியும் அதிகரித்துள்ளது. இறக்குமதி 12.24 சதவீதம் அதிகரித்து, 1.96 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நாட்டில் பெட்ரோலியம், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையில் வளர்ச்சி ஏற்பட்டதை தொடர்ந்து, ஏற்றுமதியும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.கடந்த நிதியாண்டை பொறுத்தவரை, மொத்த ஏற்றுமதி 31.89 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து, சாதனை படைத்துள்ளது.
இக்காலகட்டத்தில் இறக்குமதியும் 46.50 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|