பதிவு செய்த நாள்
20 ஏப்2022
21:28
புதுடில்லி,–நாட்டின் தொலைதொடர்பு சந்தாதாரர்கள் எண்ணிக்கை, கடந்த பிப்ரவரியில் 116 கோடியாக சரிவைக் கண்டிருப்பதாக, தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’ தெரிவித்துள்ளது.
மேலும், தொடர்ந்து 3வது மாதமாக, ‘ரிலையன்ஸ் ஜியோ’ வாடிக்கையாளர்களை இழந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:தொலைபேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, கடந்த ஜனவரியில் 116.9 கோடியாக இருந்தது.
இது பிப்ரவரி கடைசியில், 116.6 கோடியாக சரிந்துள்ளது. மொபைல்போன் பிரிவில் ‘ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா’ ஆகிய நிறுவனங்கள் இழப்பை சந்தித்துள்ளன.‘பார்தி ஏர்டெல்’ நிறுவனம் மட்டுமே, மொபைல் போன் பிரிவில், கூடுதல் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.ஒயருடன் கூடிய இணைப்பை கொண்ட தொலைபேசியை பொறுத்தவரை, பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., ஆகியவை, அதிக நபர்களை இழந்துள்ளன.
தனியார் துறையில் இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கடந்த மூன்று மாதங்களாகவே, ரிலையன்ஸ் ஜியோவின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, சரிவைக் கண்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தற்போதைய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 40.27 கோடியாக உள்ளது. இவ்வாறு டிராய் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|