பதிவு செய்த நாள்
28 ஏப்2022
23:52
புதுடில்லி– ஊடகங்கள் பக்கம் பார்வையை திருப்பி வருகின்றனர், உலகின் பெரும் செல்வந்தர்கள். எலான் மஸ்க் டுவிட்டரை வாங்குகிறார்.
கவுதம் அதானி, ‘ஏ.எம்.ஜி., மீடியா நெட்வொர்க்ஸ்’ எனும் நிறுவனத்தை துவங்கி உள்ளார். அடுத்த கட்டமாக, ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ தலைவர் முகேஷ் அம்பானியும், ஊடக வணிகத்தில் தீவிரம் காட்ட துவங்கியுள்ளார்.ரிலையன்ஸ் மற்றும் ‘வயாகாம் 18’ நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனமான ‘போதி ட்ரீ சிஸ்டம்ஸ்’ உடன் இணைந்து, இந்தியாவில் மிகப் பெரிய ‘டிவி’ மற்றும் ‘டிஜிட்டல் ஸ்ட்ரீமிங்’ நிறுவனத்தை துவங்க இருப்பதாக அறிவித்துள்ளன.போதி ட்ரீ சிஸ்டம்ஸ், ‘வயாகாம் 18’ நிறுவனத்தில், 13 ஆயிரத்து 500 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான, ‘ரிலையன்ஸ் புராஜெக்ட்ஸ் அண்டு பிராப்பர்ட்டி மேனேஜ்மென்ட் சர்வீசஸ்’ நிறுவனம் 1,645 கோடி ரூபாயை முதலீடு செய்வதுடன், ‘ஜியோசினிமா’ ஓ.டி.டி., செயலியையும், வயாகாம் 18 நிறுவனத்துக்கு மாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊடக நிறுவனமான ‘பாரமவுண்டு குளோபல்’ தொடர்ந்து பங்குதாரராக இருந்து, பங்களிப்புகளை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, நேற்று பங்குச் சந்தையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் விலை- 1.14 சதவீதம் அதிகரித்து 2,810 ரூபாயாக உயர்ந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|