பதிவு செய்த நாள்
28 ஏப்2022
23:55
புதுடில்லி–‘யுனிபார்ட்ஸ் இந்தியா’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்து உள்ளது.
சாலைகள் அல்லாத பகுதிகளில், பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் தயாரிப்பில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்கு 6 ஆலைகள் உள்ளன.பங்கு வெளியீட்டின் போது, முழுக்க, நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 15.73 கோடி பங்குகள் மட்டுமே விற்பனை செய்ய இருப்பதாக, இந்நிறுவனம் விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.
இது, இந்த நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான மூன்றாவது முயற்சியாகும்.இதற்கு முன்பாக, கடந்த 2014ல் ஒரு முறையும், 2018ல் ஒருமுறையும் புதிய பங்கு வெளியீட்டுக்காக, செபியின் அனுமதியை பெற்றும், அதன் பின் சந்தை சூழல் காரணமாகவும் வர இயலாமல் போய்விட்டது.இந்நிறுவனம், கிட்டத்தட்ட 25க்கும் மேற்பட்ட நாடுகளுடன் வணிகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|