பதிவு செய்த நாள்
01 மே2022
19:16
நாட்டின் மிகப்பெரிய பொது பங்கு வெளியீடு என கருதப்படும், ஆயுள் காப்பீடு கழகம், எல்.ஐ.சி., பொது பங்கு வெளியீடு வரும் புதன் கிழமை துவங்குகிறது.
இந்த பங்கு வெளியீட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:பொதுவாக பங்கு வெளியீடுகளில் ஊழியர்கள் மற்றும் மூல நிறுவனங்களின் பங்குதாரர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்படும். முதல் முறையாக எல்.ஐ.சி., நிறுவனம் பாலிசிதாரர்களுக்கு இந்த வெளியீட்டில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கியுள்ளது.
பங்கு வெளியீட்டில் பங்கேற்க ‘டிமெட்’ கணக்கு பெற்றிருக்க வேண்டும் மற்றும் பாலிசியுடன் பான் எண்ணை இணைத்திருக்க வேண்டும். பங்கு வெளியீட்டில் நிறுவன ஊழியர்களுக்கு பங்கு ஒன்றுக்கு 45 ரூபாய் சலுகை மற்றும் பாலிசிதாரர்களுக்கு 60 ரூபாய் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
சில்லரை முதலீட்டாளர்கள் பாலிசிதாரர் என்ற முறையில் ஒரு விண்ணப்பமும், வழக்கமான பிரிவில் இன்னொரு விண்ணப்பமும் சமர்ப்பிக்கலாம். பங்கு வெளியீடு ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள குறைந்தபட்ச எண்ணிக்கையிலான பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை விண்ணப்பிக்கலாம். பின்னர், ஏல முறையில் விண்ணப்பித்தவர்களுக்கு பங்குகள் ஒதுக்கப்படும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|