பதிவு செய்த நாள்
05 மே2022
21:12
புதுடில்லி : கடந்த ஏப்ரலில், வாகன விற்பனை 37 சதவீதம் அதிரித்திருப்பதாக, வாகன முகவர்கள் கூட்டமைப்பான எப்.ஏ.டி.ஏ., தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த ஏப்ரலில், வாகன சில்லரை விற்பனை 37 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்த வாகனங்கள் விற்பனை, ஏப்ரலில் 16.28 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. இதுவே, இதற்கு முந்தைய ஆண்டு ஏப்ரலில் 11.88 லட்சம் வாகனங்களாக குறைந்து இருந்தது.மதிப்பீட்டு மாதத்தில் பயணியர் வாகனம், இருசக்கர வாகனம் என அனைத்தும் அதிகம் விற்பனை ஆகியுள்ளன.
வர்த்தக வாகனங்களும் அதிகம்விற்பனை ஆகியுள்ளன.கொரோனா பரவல் காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடும்போது, இப்போதைய விற்பனை அதிகமே.ஆனால், கொரோனாவுக்கு முந்தைய 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, ஏப்ரலில் 6 சதவீதம் குறைவாகவே விற்பனை ஆகியிருக்கிறது.
உக்ரைன் போர் தொடர்வது, சீனாவில் கொரோனா பரவல் காரணமாக தடை நீடிப்பது ஆகியவற்றால், ‘செமிகண்டக்டர் சிப்’ உள்ளிட்ட பல பொருட்களுக்கான சப்ளை, பாதிப்புக்கு ஆளாகி உள்ளது. தற்போது ரிசர்வ் வங்கி, வட்டியை அதிகரித்தித்துள்ளது. இது நுகர்வோர், வாகனக் கடன் வாங்குவதை பாதிக்கும்.
எரிபொருள் விலையும் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. இதன் காரணமாக, விற்பனை மேலும் பாதிக்கப்படக்கூடும்.இவ்வாறு முகவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|