பதிவு செய்த நாள்
05 மே2022
21:13
புதுடில்லி : ஐ.பி.ஓ., எனும் புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் இரு நிறுவனங்கள், தங்கள் பங்கின் விலையை நிர்ணயித்து, அறிவித்து உள்ளன.
இம்மாதம் 10 மற்றும் 11ம் தேதிகளில், முறையே ‘புருடெண்ட் கார்ப்பரேட் சர்வீசஸ்’ மற்றும் ‘டெலிவரி’ஆகிய நிறுவனங்கள் பங்கு வெளியீட்டுக்குவருகின்றன.இதையடுத்து, இந்நிறுவனங்கள் பங்குகளின் விலையை நிர்ணயித்து அறிவித்துள்ளன.புருடெண்ட் நிறுவனம், ஒரு பங்கின் விலை 595 – 630 ரூபாய என அறிவித்து உள்ளது. சில்லரை சொத்து மேலாண்மை வணிகத்தில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக 539 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது.
இதேபோல், சப்ளை செயின் நிறுவனமான டெலிவரி, 11ம் தேதியன்று பங்கு வெளியீட்டுக்கு வரும் நிலையில், அதன் ஒரு பங்கின் விலையை 462–487ரூபாயாக நிர்ணயித்து அறிவித்துள்ளது. இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 5,235 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. முன்னதாக 7,640 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டிருந்த நிலையில், அதை தற்போது குறைத்துக் கொண்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|