வட்டியை உயர்த்தும் வங்கிகள் வட்டியை உயர்த்தும் வங்கிகள் ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘மகிந்திரா’ வாகன வணிகம் மூன்றாக பிரிக்க திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2022
19:41

புதுடில்லி:நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, ‘மகிந்திரா அண்டு மகிந்திரா’ அதன் வாகன வணிகத்தை, மூன்று பிரிவுகளாக பிரிக்க திட்டமிட்டுள்ளது.
இது குறித்து விபரமறிந்த ஒருவர் கூறியதாவது:மகிந்திரா குழுமத்தின் வருவாயை பொறுத்தவரை, 55 சதவீத பங்களிப்பை வாகன தயாரிப்பு பிரிவு வழங்கி வருகிறது. இந்நிலையில், வாகன வணிகத்தை மூன்றாக பிரிக்க திட்டமிடப்பட்டு வருகிறது. மின்சார வாகன பிரிவு, பயணியர் வாகன பிரிவு மற்றும் டிராக்டர் பிரிவு என மூன்று தனித்தனி வணிகமாக பிரிக்க உள்ளது.
மின் வாகன பிரிவு புனேயில் உள்ள ஆலையுடன், இத்தாலிய வடிவமைப்பு நிறுவனமான ‘ஆட்டோமொபில் பின்இன்பரினா’ உடன் இணைந்து செயல்படும் என தெரிகிறது. வேளாண் கருவிகள் மற்றும் டிராக்டர் பிரிவுஏற்கனவே ‘பஞ்சாப் டிராக்டர்’ நிறுவனத்தை கையகப் படுத்தி தயாராக இருக்கிறது.

பயணியர் வாகன பிரிவு, மும்பையை அடிப்படையாக கொண்டு தனியாக செயல்படும்.இந்த பிரிவுக்கு முக்கிய காரணமாக இருப்பது மின் வாகன வணிகமே. இதன் வாயிலாக புதிய முதலீடுகளையும், கூடுதல் சந்தை மதிப்பையும் பெற மகிந்திரா முயற்சிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)