பதிவு செய்த நாள்
10 மே2022
06:11
புதுடில்லி,–‘ஓலா, ஊபர்’ போன்ற வாடகை கார் சேவை நிறுவனங்கள் மீது, நுகர்வோர் தரப்பிலிருந்து புகார்கள் அதிகளவில் வருவதை அடுத்து, இந்நிறுவனங்களுடன் அரசு இன்று பேச்சு நடத்த உள்ளது.இந்த பேச்சின் போது, கட்டணத்தை கணக்கிடுவது, சவாரி ரத்தாவது, நுகர்வோர் தரவு பாதுகாப்பு போன்றவை குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாக, நுகர்வோர் விவகாரத் துறை செயலாளர் ரோஹித் குமார் சிங் கூறியுள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:வாடகை கார்களுக்கான தளங்கள், நியாயமற்ற வர்த்தகத்தில் ஈடுபடுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, சவாரி ரத்து செய்வது குறித்த புகார்கள் அதிகரித்துள்ளன.முன்பதிவுகளை ஏற்றுக்கொண்ட பிறகு, பயணங்களை ரத்து செய்யுமாறு வாகன ஓட்டுனர்கள் வாடிக்கையாளர்களை வற்புறுத்துகின்றனர். இதனால், வாடிக்கையாளர்கள் ரத்து செய்ததற்கான அபராதத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு விடுவதாக புகார்கள் வருகின்றன.மேலும், கட்டணத்தை கணக்கிடுவது குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. குறிப்பாக, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு செல்வதற்கு, இரண்டு பேர்களுக்கு, ஒரே சமயத்தில், இரண்டு விதமான கட்டணங்கள் எப்படி விதிக்கப்படுகிறது என்பது குறித்து கேள்விகள் வருகின்றன.இதுவரை இல்லாத வகையில், தற்போது மிக அதிக அளவில் புகார்கள் வருகின்றன. குறிப்பாக சவாரி ரத்து குறித்து அதிக புகார்கள் வருகின்றன.இவை குறித்த தகவல் மற்றும் விளக்கங்களை கேட்டுள்ளோம். கூட்டத்தில் அவை குறித்து ஆலோசித்து, பின் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|