பதிவு செய்த நாள்
20 மே2022
20:52
புதுடில்லி : இந்திய தொலைதொடர்பு ஆணையமான ‘டிராய்’ போனில் ஒருவர் அழைக்கும்போது, வாடிக்கையாளர் குறித்த தகவலை அறிவதற்கான கே.ஒய்.சி., தரவின் அடிப்படையில், அவரது பெயர் போனின் திரையில் தோன்றுமாறு செய்வது குறித்த ஆலோசனையில் இறங்கி உள்ளது.
வழக்கமாக நமது அறிமுக வட்டத்துக்குள் இல்லாத அல்லது தெரியாத நபர் நம்மை அழைக்கும்போது, அவரது எண் மட்டுமே திரையில் பளிச்சிடும். ஆனால், அழைப்பவர் யார் என்பது பார்த்ததும் தெரியாது.இப்பிரச்னையை தீர்க்க உதவும் வகையில் சந்தையில் சில செயலிகள் ஏற்கனவே இருக்கின்றன. எனினும் அவை அவ்வளவு துல்லியமாக இருப்பதில்லை.
இதற்கு பதிலாக, கே.ஒய்.சி., தரவுகளை பயன்படுத்தும் பட்சத்தில், நம்மை அழைப்பது யார் என்பது துல்லியமாக தெரிந்துவிடும். மூன்றாம் நபர் செயலிகளை நம்ப வேண்டிய தேவையும் இருக்காது.ஆணையம், தனக்கு வந்த ஆலோசனையின் அடிப்படையில், இந்த முயற்சியில் இறங்க திட்டமிட்டுள்ளது.
இதற்கான பணிகள் இன்னும் இரண்டொரு மாதங்களில் துவங்கும் என்றும் டிராய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வசதி அறிமுகம் ஆகும் பட்சத்தில், நம்மை அழைப்பது யார் என்பதை துல்லியமாக அறிந்து, அந்த அழைப்பை ஏற்பதா அல்லது, விடுப்பதா என்ற முடிவை எளிதாக எடுக்க முடியும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|