94 ஆயிரம் கோடி ரூபாயைஇழந்த எல்.ஐ.சி., பங்குதாரர்கள்94 ஆயிரம் கோடி ரூபாயைஇழந்த எல்.ஐ.சி., பங்குதாரர்கள் ...  ‘டிஜிட்டல்’ தங்கத்தில் முதலீடு உயர்வு ‘டிஜிட்டல்’ தங்கத்தில் முதலீடு உயர்வு ...
அதிக ரசாயனம், பூச்சிக்கொல்லியால்தேயிலை ஏற்றுமதியில் பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2022
19:40

கோல்கட்டா:அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயனங்கள் இருப்பதால், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், இந்திய தேயிலை சரக்குகள் தொடர்ந்து நிராகரிக்கப்படுகின்றன.
இது குறித்து, இந்திய தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்ஷுமான் கனோரியா மேலும் கூறியதாவது:அனுமதிக்கப்பட்ட வரம்பையும் மீறி, தேயிலையில் அதிகளவு பூச்சிக் கொல்லிகளையும், ரசாயனங்களையும் பயன்படுத்துவதால், வெளிநாடுகளில் அத்தகைய சரக்குகள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகின்றன.
இலங்கை நெருக்கடியில் சிக்கி இருப்பதை அடுத்து, தேயிலை வணிகத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டு உள்ளது. ஏற்றுமதி அதிகரிக்க வேண்டிய இத்தகைய சூழலில், அதிக அளவிலான தேயிலைகள் நிராகரிக்கப்படுகின்றன.உள்நாட்டில் விற்கப்படும் அனைத்து தேயிலைகளும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும்.

ஆனாலும், பெரும்பாலான வாடிக்கையாளர்கள், வழக்கத்திற்கு மாறாக, அதிக ரசாயனம் கொண்ட தேயிலையை வாங்குகின்றனர்.கடந்த ஆண்டில் 19.59 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. நடப்பு ஆண்டில் 30 கோடி கிலோவாக அதிகரிக்க இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
பல நாடுகள், தேயிலை விஷயத்தில், கடுமையான தரக்கட்டுப்பாடு விதிகளை வைத்திருக்கின்றன. அந்த விதிகளை நிறைவேற்றுவதை விட்டுவிட்டு, உள்நாட்டில் ஆணையத்தின் விதிகளை தளர்த்துமாறு பலர் கோரிக்கை வைக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)