‘நத்திங்’ ஸ்மார்ட் போன்தமிழகத்தில் தயாராகிறது  ‘நத்திங்’ ஸ்மார்ட் போன்தமிழகத்தில் தயாராகிறது ... பிரியாவிடை பெறும்  ‘இன்டர்நெட் எக்ஸ்புளோரர்’ பிரியாவிடை பெறும் ‘இன்டர்நெட் எக்ஸ்புளோரர்’ ...
கடினமான நாளை சந்தித்த இந்திய பங்குச் சந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2022
07:06


மும்பை : இந்திய பங்குச் சந்தை குறியீடுகள், நேற்று ஒரு கடினமான நாளை சந்தித்தன.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ 1,457 புள்ளிகள் சரிவைக் கண்டது. தேசிய பங்குச் சந்தையின் ‘நிப்டி’ 427 புள்ளிகள் சரிவைக் கண்டது.

இதனால் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், நேற்று ஒரு நாளில் மட்டும், கிட்டத்தட்ட 7 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர்.உலக அளவில் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டது மற்றும் அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேறியது ஆகியவை காரணமாக, நேற்று, இந்திய பங்குச் சந்தைகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன.அமெரிக்காவின் சில்லரை விலை பணவீக்கம் கடுமையாக அதிகரிக்கும் என்ற அச்சமும் முதலீட்டாளர்களிடம் எழுந்துள்ளது.

அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிக்கும் பட்சத்தில், அந்நாட்டு மத்திய வங்கி, வட்டியை கடுமையாக அதிகரிக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் அச்சப்படுகின்றனர். அன்னிய நிறுவன முதலீட்டாளர்களும் தங்கள் முதலீட்டை அதிகளவில் வெளியே எடுத்து வருகிறார்கள்.ரூபாய் மதிப்பும் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்ச சரிவைக் கண்டுள்ளது. இவை போன்ற நிகழ்வுகள், சந்தை சரிவுக்கு காரணமாக அமைந்துவிட்டன.பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ் டெக் மகிந்திரா, டி.சி.எஸ்., இன்போசிஸ், என்.டி.பி.சி., உள்ளிட்ட பல நிறுவன பங்குகள் விலை நேற்று மிகவும் சரிந்தன.

@block@@subboxhd@எல்.ஐ.சி., 28 சதவீதம் சரிவு@@subboxhd@@நேற்று ஒரு நாளில் மட்டும், கிட்டத்தட்ட 7 லட்சம் கோடி ரூபாயை பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர். எல்.ஐ.சி., நிறுவன பங்குகள் விலை அதன் வெளியீட்டு விலையிலிருந்து கிட்டத்தட்ட 28 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. தொடர்ந்து 10வது வர்த்தக நாளாக இந்நிறுவன பங்குகள் விலை சரிவைக் கண்டு வருகிறது.@@block@@

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)