பதிவு செய்த நாள்
14 ஜூன்2022
07:06
மும்பை : இந்திய பங்குச் சந்தை குறியீடுகள், நேற்று ஒரு கடினமான நாளை சந்தித்தன.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ 1,457 புள்ளிகள் சரிவைக் கண்டது. தேசிய பங்குச் சந்தையின் ‘நிப்டி’ 427 புள்ளிகள் சரிவைக் கண்டது.
இதனால் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், நேற்று ஒரு நாளில் மட்டும், கிட்டத்தட்ட 7 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர்.உலக அளவில் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டது மற்றும் அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேறியது ஆகியவை காரணமாக, நேற்று, இந்திய பங்குச் சந்தைகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன.அமெரிக்காவின் சில்லரை விலை பணவீக்கம் கடுமையாக அதிகரிக்கும் என்ற அச்சமும் முதலீட்டாளர்களிடம் எழுந்துள்ளது.
அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிக்கும் பட்சத்தில், அந்நாட்டு மத்திய வங்கி, வட்டியை கடுமையாக அதிகரிக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் அச்சப்படுகின்றனர். அன்னிய நிறுவன முதலீட்டாளர்களும் தங்கள் முதலீட்டை அதிகளவில் வெளியே எடுத்து வருகிறார்கள்.ரூபாய் மதிப்பும் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்ச சரிவைக் கண்டுள்ளது. இவை போன்ற நிகழ்வுகள், சந்தை சரிவுக்கு காரணமாக அமைந்துவிட்டன.பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ் டெக் மகிந்திரா, டி.சி.எஸ்., இன்போசிஸ், என்.டி.பி.சி., உள்ளிட்ட பல நிறுவன பங்குகள் விலை நேற்று மிகவும் சரிந்தன.
@block@@subboxhd@எல்.ஐ.சி., 28 சதவீதம் சரிவு@@subboxhd@@நேற்று ஒரு நாளில் மட்டும், கிட்டத்தட்ட 7 லட்சம் கோடி ரூபாயை பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர். எல்.ஐ.சி., நிறுவன பங்குகள் விலை அதன் வெளியீட்டு விலையிலிருந்து கிட்டத்தட்ட 28 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. தொடர்ந்து 10வது வர்த்தக நாளாக இந்நிறுவன பங்குகள் விலை சரிவைக் கண்டு வருகிறது.@@block@@
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|