பதிவு செய்த நாள்
18 அக்2014
01:29
மும்பை:முன்னணி நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் நன்கு இருந்ததையடுத்து, முதலீட்டாளர்கள் பங்கு வர்த்தகத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.குறிப்பாக, மோட்டார் வாகனம், வங்கி, பொறியியல் நிறுவனப் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்கியதை அடுத்து, ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’, 0.40 சதவீதத்திற்கும் மேல் ஏற்றம் கண்டன.
அதேசமயம், தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனப் பங்குகளுக்கு மட்டும் தேவை குறைந்து காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 109.19 புள்ளிகள் அதிகரித்து, 26,108.53 புள்ளிகளில் நிலைபெற்றது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பெல், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட, 22 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், டி.சி.எஸ்., விப்ரோ உள்ளிட்ட, 8 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 31.50 புள்ளிகள் உயர்ந்து, 7,779.70 புள்ளிகளில் நிலைகொண்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|