பதிவு செய்த நாள்
28 அக்2016
04:04
புதுடில்லி;பண பரிவர்த்தனையின் போது, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை கவனமாக கையாளுமாறு, பொதுமக்களை, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில், பாகிஸ்தானில் இருந்து, இந்திய ரூபாய் நோட்டுகளை போலியாக அச்சிட்டு, நம் நாட்டில் புழக்கத்தில் விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை தடுக்க மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன்படி, 500, 1,000 ரூபாய்களை கவனமாக கையாளுமாறு, தற்போது, பொதுமக்களை, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:வழக்கமான பண பரிவர்த்தனையின் போது, கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட, சமூக விரோதிகள் திட்டமிட்டு உள்ளதாக, தகவல் கிடைத்துள்ளது. எனவே, பொதுமக்கள், 500, 1,000 ரூபாய் நோட்டுகளை தீவிரமாக ஆய்வு செய்து, கள்ள நோட்டு இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே, பரிவர்த்தனை மேற்கொள்ளும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|