பதிவு செய்த நாள்
14 ஜன2020
01:25
மும்பை:நேற்று, மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ மற்றும் தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’ ஆகியவை, புதிய உச்சத்தை தொட்டன.சென்செக்ஸ், வர்த்தகத்தின் இடையே, 300 புள்ளிகள் அதிகரித்து, 41899.63 புள்ளிகளைத் தொட்டது. இது, இதுவரை தொடாத உயரமாகும். பின், வர்த்தக முடிவில்,259.97 புள்ளிகள் அதிகரித்து, 41859.69 புள்ளிகளில் நிலைபெற்றது.
இதேபோல், நிப்டி, வர்த்தகத்தின் இடையே, 12337.75 என்ற சாதனை உயரத்தை தொட்டது. பின், வர்த்தகம் முடிவில், 72.75 புள்ளிகள் அதிகரித்து, 12329.55 புள்ளிகளில் நிலைபெற்றது.சந்தையின் இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக, ‘இன்போசிஸ்’ இருந்தது. இந்நிறுவனப் பங்கு நேற்று, 4.76 சதவீதம் உயர்வைக் கண்டது.நடப்பு நிதியாண்டின், மூன்றாம் காலாண்டில், இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம், 23.7 சதவீதம் அதிகரித்து, 4,466 கோடி ரூபாயாக உயர்ந்தது.
இதைத் தொடர்ந்தே, சந்தையில் இந்நிறுவனப் பங்குகள் விலை ஏற்றம் பெற்றன.இன்போசிஸ் தவிர, ‘இண்டஸ்இண்ட் வங்கி, பார்தி ஏர்டெல், டெக் மகிந்திரா, டாடா ஸ்டீல், பவர்கிரிட்’ போன்ற நிறுவனப் பங்குகளும் உயர்வைக் கண்டன.இதற்கு மாறாக, டி.சி.எஸ்., – எஸ்.பி.ஐ., பஜாஜ் ஆட்டோ, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட பல நிறுவன பங்குகள் விலை சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|