பதிவு செய்த நாள்
05 ஜூன்2020
11:48
புதுடில்லி: மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையில் இரண்டாவது தவணையாக ரூ.36,400 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 2019- 20 நிதியாண்டில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஜிஎஸ்டி தொகை ரூ.1.50 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரோனாவில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், மாநில அரசுகளுக்கு வருமானம் குறைந்துள்ள சூழ்நிலையில் செலவு அதிகரித்துள்ளது. இந்நிலையில், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு , 2019-20 நிதியாண்டிற்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையாக ரூ.36,400 கோடியை மத்திய அரசு, நேற்று(ஜூன்4) ஒதுக்கியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.கடந்த 15 நாட்களில், இழப்பீட்டு தொகையில் இரண்டாவது தவணை ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2019- 20 நிதியாண்டில் மொத்த இழப்பீடும் ஒதுக்கப்பட்டு விட்டது.
கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல்- நவம்பர் மாதங்களில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடாக ரூ. 1,15,096 கோடியை விடுத்தது. இந்நிலையில் 2019-ம் ஆண்டு டிசம்பர் முதல் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதங்களுக்கான ஜி.எஸ்.டி. இழப்பீடாக ரூ. 36 ஆயிரத்து 400 கோடியை விடுவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜிஎஸ்டி அறிமுகபடுத்தப்பட்ட பின்னர், இந்த வரி காரணமாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஏற்படும் இழப்பு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு சரி செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|