பதிவு செய்த நாள்
27 செப்2020
20:46
பொதுத்துறை நிறுவனங்கள் மூத்த ஊழியர்களுக்கு அவ்வப்போது ’வி.ஆர்.எஸ்.,’ எனும் விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்து வருகின்றன. தனியார் துறையிலும் இந்த வசதி அளிக்கப்படுகிறது. ஓய்வு பெறும் வயதுக்கு முன்னதாக விருப்ப ஓய்வு பெற்றுக்கொள்வதில் பல்வேறு அணுகூலங்கள் இருந்தாலும், இந்த வசதியை பயன்படுத்திக்கொள்வதை சரியாக திட்டமிட வேண்டும். ஓய்வுக்கு பிந்தைய காலத்திற்கான சரியான திட்டமிடலும் அவசியம். இதற்கு உதவும் அம்சங்களை பார்க்கலாம்:
என்ன பலன்?
விருப்ப ஓய்வு திட்டத்தை பயன்படுத்திக்கொள்வது என்பது முன்னதாகவே ஓய்வு பெறுவது போன்றது. எனினும், முன்னதாகவே பணியில் இருந்து விலகுவதால் கிடைக்க கூடிய பலன்களை ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும். மொத்தமாக கிடைக்கும் தொகை, பணியில் இருந்தால் கிடைக்க கூடிய தொகையுடன் எப்படி பொருந்துகிறது என பார்க்க வேண்டும்.
மற்ற பலன்கள்:
மொத்தமாக கிடைக்கும் தொகையைத்தவிர மற்ற பலன்களையும் பரிசீலிக்க வேண்டும். பணியில் இருக்கும் போது சம்பளம் தவிர மற்ற சலுகைகள் கிடைக்கும். ஊதிய உயர்வு, போனஸ் போன்றவற்றுக்கும் வாய்ப்பு உண்டு. ஓய்வு பெறும் காலத்தில் அதிக ஊதியம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இவற்றை எல்லாம் கணக்கிட்டு பார்க்க வேண்டும்.
வரி விதிப்பு:
விருப்ப ஓய்வு திட்ட பலனை கணக்கிடும் போது வரி விதிப்பு அம்சத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். விஆர்.எஸ்.,. தொகையில், 5 லட்சம் ரூபாய் வரை வரிவிதிப்பு இல்லை என்றாலும், அதற்கு மேலான தொகைக்கு வரி விதிப்பு பொருந்தும். மேலும், ஓய்வு பெற்ற ஆண்டுக்கு மட்டுமே இந்த விலக்கை கோர முடியும்.
திட்டமிடல்:
பலன்கள் சாதகமாக இருக்கும் போது விருப்ப ஓய்வு திட்டத்தை நாடலாம் என்றாலும், எதிர்காலத்திற்கு சரியாக திட்டமிட வேண்டும். ஓய்வு காலம் அதிகரிப்பதையும் மனதில் கொள்ள வேண்டும். எனவே, மாற்று வேலை கிடைப்பதற்கான சாத்தியத்தையும் பரிசீலிக்க வேண்டும்.
முதலீடு:
இந்த திட்டம் மூலம் கிடைக்கும் தொகையை சரியான முறையில் முதலீடு செய்ய வேண்டும். அடுத்த மூன்றாண்டுகள், ஏழு ஆண்டுகள், பத்து ஆண்டுகள் இலக்குகள் என பிரித்து கொண்டு அவற்றுக்கு ஏற்ப முதலீடு செய்யலாம். மாதாந்திர செலவுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|