பதிவு செய்த நாள்
13 ஜன2021
20:55
திருப்பூர்:‘பொங்கலுக்கு பின், திருப்பூர் பின்னலாடைத்துறை சிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன’ என்கின்றனர், பின்னலாடைத் துறையினர்.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்(ஏ.இ.பி.சி.,) தலைவர் சக்திவேல் கூறியதாவது: ஊரடங்கு காலத்தில், மற்ற நகரங்கள் முழுமையாக முடங்கின. ஆனால், முழு கவச ஆடை; முக கவசம் தயாரிப்பு என, திருப்பூர் பின்னலாடை துறை, தன்னை உயிர்ப்புடனேயே வைத்திருந்தது.
தற்போது, இன்னல்கள் எல்லாம் விலகிவருகின்றன. கொரோனாவுக்கு தடுப்பூசி தயாராகிவிட்டது.செயற்கை இழை ஆடை உற்பத்தியை ஊக்கப்படுத்தும் வகையில், மத்திய அரசு சிறப்பு திட்டங்களை விரைவில் அறிவிக்க உள்ளது. அரசின் ஊக்கம்; தொழில் முனைவோர் மற்றும் தொழிலாளரின் கடின உழைப்புக்கு, நிச்சயம் வெற்றி கிடைக்கும். தை பிறந்தால் வழி பிறக்கும். இந்த ஆண்டு, ஆடை உற்பத்தி துறைக்கு பிரகாசமானதாக அமையும்.இவ்வாறு கூறினார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறியதாவது:கொரோனா பாதிப்புகளில் இருந்து, திருப்பூர் பின்னலாடை துறை, மீண்டுவருகிறது. அமெரிக்கா, ஐரோப்பா உட்பட உலகளாவிய நாடுகளில் இருந்து, ஆடை தயாரிப்புக்கான, வர்த்தக விசாரணை வருகை அதிகரித்துள்ளது.
சீனாவுக்கு செல்ல வேண்டிய குளிர்கால ஆடை தயாரிப்பு ஆர்டர்கள், நம் நாட்டை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், குளிர்கால ஆடை தயாரிப்பில், நாம் பின்தங்கியுள்ளோம். பின்னலாடை நிறுவனங்கள், குளிர் கால ஆடை உற்பத்தியை மேம்படுத்த வேண்டும்.இவ்வாறு, ராஜா சண்முகம் கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|