வணிகர்களுக்கான செயலி எஸ்.பி.ஐ., அறிமுகம்வணிகர்களுக்கான செயலி எஸ்.பி.ஐ., அறிமுகம் ...  மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்றம்? மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்றம்? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நகைக்கடன் பெறும் முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 பிப்
2021
21:39

உடனடி பணத்தேவை ஏற்படும் போது, தங்க நகைக்கடன் வசதியை நாடலாம். மற்ற கடன்கள் போல் அல்லாமல், அதிக கேள்விகள் இல்லாமல், தங்க நகைக்கடன், எளிதாகவே கிடைத்து விடுகிறது. ஈட்டுறுதி கொண்ட கடன் என்பதால், கடன் தகுதி, திரும்பி செலுத்தும் தன்மை, ஆகிய பிரச்னைகளும் இல்லை. தனிநபர்கள், அவசர தேவையை எதிர்கொள்ளவும், வர்த்தகர்கள், குறுகிய கால, ரொக்க நெருக்கடியை சமாளிக்கவும் நகைக்கடன் உதவுகிறது. எளிதாக கிடைக்கும் கடன் என்றாலும், நகைக்கடன் பெறும் போது, மனதில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களும் இருக்கின்றன.


-வங்கி கடன்:


நகைக்கடனை, வங்கிகளிடம் இருந்தும் பெறலாம், அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்களிடம் இருந்தும் பெறலாம். இவற்றில், நகைக்கடனில் மட்டுமே கவனம் செலுத்தும் நிறுவனங்களும் இருக்கின்றன. வங்கிகளில் நகைக் கடனுக்கான வட்டி விகிதம் குறைவாக இருக்கலாம். நிதி நிறுவனங்கள் அதிக தொகை கடனாக அளிக்கலாம்.


கடன் மதிப்பு:



வங்கிகளை விட, நிதி நிறுவனங்கள், தங்கத்தை அதிக விலையில் மதிப்பதால், அவை, அதிக தொகை அளிக்கின்றன. நிதி நிறுவனங்கள், மிகவும் விரைவாகவும் கடன் தொகையை வழங்கலாம். அவை நகை மதிப்பீட்டாளர் வசதியை, அலுவலகத்திலேயே கொண்டிருக்கும். எல்லா வங்கி கிளைகளிலும் மதிப்பீட்டாளர் வசதி இருக்கும் என்று சொல்ல முடியாது.


தங்க கட்டிகள்
:


பெரும்பாலும், 18 காரட் வரை கொண்ட தங்கம், கடனுக்கான அடமானமாக பெறப்படுகிறது. இதற்கும் குறைவான காரட் கொண்ட தங்கம், ஏற்கப்படுவது இல்லை. தங்க கட்டிகளும் பெரும்பாலும் ஏற்கப்படுவதில்லை. அடமானம் வைக்கும் போது, தங்கம் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகிறது. வைரம் மற்றும் இதர கற்கள் மதிப்பிடப்படுவதில்லை.


கட்டணம்:


நகைக்கடன் தொடர்பாக கட்டணங்கள் இருக்கலாம். பெரும்பாலான வங்கிகள், முன் கூட்டியே கடனை செலுத்துவதற்கான, அபராதம் விதிப்பதில்லை. அப்படியே விதிக்கப்பட்டாலும், நிலுவை தொகையில், ஒரு சதவீத அளவில் தான் இருக்கும். மதிப்பிடும் கட்டணம் மற்றும் செயல்முறை கட்டணம் இருக்கலாம்.


பணம் செலுத்தல்:


நகைக்கடனை திரும்ப செலுத்த, பலவிதமான வழிகள் அளிக்கப்படுகின்றன. மொத்த தொகையை மாதத் தவணையாக செலுத்தலாம் அல்லது வட்டியை மட்டும் செலுத்தி வந்து, அசலை மொத்தமாக செலுத்தலாம். பணத்தை செலுத்த தவறினால், நகை ஏலம் விடப்படும். தங்கத்தின் விலைகுறைந்தால், அதற்கேற்ப தாக்கம் இருக்கும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)