பதிவு செய்த நாள்
26 பிப்2021
20:44
மும்பை:-நேற்று, பங்குச் சந்தை வர்த்தகத்தில் கடும் சரிவுகள் ஏற்பட்டதை அடுத்து, முதலீட்டாளர்கள், கடுமையான இழப்புக்கு ஆளாகினர்.
ஒரு நிமிடத்துக்கு, 1,450 கோடி ரூபாய் என்ற அளவில், இழப்பை அவர்கள் சந்தித்தனர். மொத்தத்தில், நேற்று ஒரு நாள் பங்கு வர்த்தகத்தில் மட்டும், முதலீட்டாளர்கள், 5.43 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர்.
அண்மைக்காலமாக, பங்குச் சந்தைகள் புதிய, புதிய உச்சங்களை தொட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு, மே மாதம், 4ம் தேதிக்கு பிறகு, அதிகபட்ச இழப்பை நேற்று தான் சந்தித்தன. அன்னிய முதலீட்டாளர்கள், தங்கள் பங்குகளை விற்றுவிடுவார்கள் என்ற முதலீட்டாளர்களின் பயத்தினாலும், வங்கிகள், மற்றும் நிதி நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்த காரணத்தினாலும், சந்தைகள், ‘கிடுகிடு’ சரிவைக் கண்டன.
நேற்றைய பங்கு வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் ‘சென்செக்ஸ்’, 1,939 புள்ளிகளையும்; தேசிய பங்குச் சந்தையின் ‘நிப்டி’, 568 புள்ளிகளையும் இழந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|