பதிவு செய்த நாள்
10 ஏப்2021
19:32
புதுடில்லி:கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து விதிக்கப்படும் சிறிய அளவிலான ஊரடங்கு உத்தரவுகள், குறுங்கடன் நிறுவனங்களை பாதிக்க கூடும் என, தர நிர்ணய நிறுவனமான, ‘கிரிசில்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, கிரிசில் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்படும் சிறிய அளவிலான ஊரடங்கு உத்தரவுகளால், குறுங்கடன் நிறுவனங்கள் சிக்கல்களை சந்திக்கலாம்.மஹாராஷ்டிரா மாநிலம் உள்ளிட்ட பல மாநிலங்களில், தடை உத்தரவுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இவை அதிகரிக்கும் பட்சத்தில், கடன் வசூல்கள் மிகவும் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
குறுங்கடன் வழங்குவதில் முன்னணி, 5 மாநிலங்களில் மஹாராஷ்டிராவும் ஒன்று. இங்கு மட்டும், 16 ஆயிரத்து, 700 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு முன் இருந்த வசூல், 98 -– 99 சதவீதமாக இருந்த நிலையில், இப்போது, 90 – 94 சதவீதம் ஆக சரிவைக் கண்டுள்ளது. இவ்வாறு அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|