பதிவு செய்த நாள்
12 மே2021
21:08
புதுடில்லி:கடந்த ஏப்ரல் மாதத்தில், நாட்டின் பயணியர் வாகன மொத்த விற்பனை, 10.07 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டிருப்பதாக, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு, தெரிவித்து உள்ளது.
கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த ஏப்ரலில் மொத்தம், 2.62 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. இதற்கு முந்தைய மார்ச் மாதத்தில், 2.91 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது.நாட்டின் பல இடங்களில் தடை உத்தரவுகள் பிறக்கப்பட்டது, சரிவுக்கு காரணமாக அமைந்தது. இது எதிர்பார்க்கப்பட்ட சரிவு தான். கடந்த ஆண்டு ஏப்ரலில், முழு ஊரடங்கால் விற்பனை எதுவும் நடைபெறவில்லை.
நடப்பு ஆண்டு ஏப்ரலில், இருசக்கர வாகன விற்பனையும் சரிவைக் கண்டுள்ளது. கிட்டத் தட்ட, 33 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.நாடு தற்போது இருக்கும் இக்கட்டான சூழலை கருத்தில் கொண்டு, வாகன தயாரிப்பு துறையினர், தங்கள் ஆலைகளில், ஆக்சிஜன் தயாரிக்கும் பணியை முன்வந்து மேற்கொண்டு வருகின்றனர்.இவ்வாறு தெரிவிக்கப் பட்டு உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|