பதிவு செய்த நாள்
10 ஜூன்2021
20:45
புதுடில்லி:‘உத்கர்ஷ் சிறு நிதி வங்கி’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’அனுமதி வழங்கி உள்ளது.
இவ்வங்கி, கடந்த மார்ச் மாதத்தில் பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக ‘செபி’யிடம் விண்ணப்பித்திருந்தது.‘உத்கர்ஷ் வங்கி’ இந்த பங்கு வெளியீட்டின்போது 750 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளை விற்பனை செய்ய உள்ளது.மேலும், பங்குதாரர்கள் வசம் இருக்கும் 600 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு களையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
இவ்வங்கி, வாரணாசியை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வரும், சிறு நிதி வங்கியாகும். புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை, எதிர்கால மூலதன தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ள உள்ளது.நுண்கடன் வழங்கும் நிறுவனமாக, கடந்த 2009ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்த உத்கர்ஷ், 2017ல் சிறு நிதி வங்கியாக உயர்ந்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் நிலவரப்படி, இவ்வங்கிக்கு 27.4 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். மேலும் 528 வங்கி மையங்களும் உள்ளன.பீஹார், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் அதிகம் காலுான்றி உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|