பதிவு செய்த நாள்
11 ஜன2019
00:14
மும்பை:தொலைதொடர்பு சேவையில் களமிறங்கி, 'ஏர்டெல்' உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களை கதி கலக்கிய, முகேஷ் அம்பானியின், 'ரிலையன்ஸ் ஜியோ' நிறுவனம், அடுத்து, வணிகர்கள் பணப் பரிவர்த்தனைக்குபயன்படுத்தும், பி.ஓ.எஸ்., சேவையிலும் களமிறங்க உள்ளது.
இது குறித்து, தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:பல்பொருள் வணிக மையங்கள், சில்லரை விற்பனை கடைகள் ஆகியவை, மின்னணு தொழில்நுட்பத்தில், பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள, பி.ஓ.எஸ்., எனப்படும், கையடக்க சாதனத்தை பயன்படுத்துகின்றன. இதில், வாடிக்கையாளர், 'டெபிட், கிரெடிட்' கார்டுகள் மூலம், வாங்கும் பொருட்களுக்கு பணம் செலுத்தலாம்.அந்த பரிவர்த்தனைக்கு, கடைக்காரர், குறிப்பிட்ட சேவைக் கட்டணத்தை, வாடிக்கையாளரின் வங்கிக்கு செலுத்த வேண்டும்.
சென்னை
இத்தகைய, பி.ஓ.எஸ்., சேவையை, சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட ஆறு நகரங்களில் சோதனை அடிப்படையில், ஆர்ஜியோ ஏற்கனவே துவக்கி விட்டது.இந்த சாதனத்தை நிறுவ, வணிகர்கள், மளிகை கடைக்காரர்கள் உள்ளிட்டோர், ஆர்ஜியோ வுக்கு, 3,000 ரூபாய் டெபாசிட் செலுத்த வேண்டும். டெபிட், கிரெடிட் கார்டுகளில், 2,000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு, சேவைக் கட்டணம் இல்லை என, ஆர்ஜியோ தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, ஆர்ஜியோவின், பி.ஓ.எஸ்., சாதனங்களை நிறுவ, வணிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தற்போது, இச்சேவை யில், ரிலையன்சின், 'ஆர்ஜியோ மணி' மற்றும் தேசிய பணப்பட்டுவாடா கழகத்தின், 'பீம்' ஆப் வாயிலான பரிவர்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. விரைவில், மேலும் பல மின்னணு பணப் பைநிறுவனங்களின் சேவைகள் இணைக்கப்பட உள்ளன.
ரிலையன்ஸ் ஏற்கனவே,'ரிலையன்ஸ் ரீடெய்ல், ரிலையன்ஸ் பிரெஷ், ரிலையன்ஸ் டிரெண்டு' உள்ளிட்ட சில்லரை விற்பனை துறையில் ஈடுபட்டு வருகிறது. அதனால், இத்துறையில், ஆர்ஜியோவின், பி.ஓ.எஸ்., சேவை, மிக விரைவாக வளர்ச்சி காணும் எனத் தெரிகிறது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.கடும் போட்டி
ஆர்ஜியோ,பி.ஓ.எஸ்., சந்தையில், 'பேடிஎம், போன்பீ' உள்ளிட்ட நிதி தொழில்நுட்பசேவை நிறுவனங்களுக்கும், இச்சந்தையில், 70 சதவீத பங்கை கொண்டுள்ளவங்கிகளுக்கும், கடும் போட்டியை ஏற்படுத்தும் என,எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|